Thursday, September 1, 2011

எதுவும் முடியும் .....

நண்பா நீ நினைத்தால் எதுவும் முடியும்,.....





உன் சுயம் அறி ......சுடர் விடு......

என் இனிய

இளைஞனே

சற்றே கவனி உற்றே நோக்கு


வெறுப்பின்

அம்சமில்லை

வாழ்க்கை

நெருப்பின் அம்சம்


உன் சுயம் அறி

அதில்

நீ சுடர் விடு

திக்கு திசையற்று

தீனர்களாய்

திரிவதில் பயனுண்டோ?


எத்திக்கும்

உன் பெயரை

உச்சத்தில்

உச்சரிக்க

வேண்டாமா?


முடியாது என்பது

முட்டாள்களின்

வார்த்தை

எதற்கும் முயற்சி செய்

இன்றேல்

பயிற்சி செய்....


ஒவ்வொரு உயிரின்

முயற்சியே

அதன் மலர்ச்சி ......


உன் மனதை

ஆழ உழு

உன் செவிகளை

கொஞ்சம்

அகல திற ......


விழிகளை

இன்னும்

விரித்தே வை ......


கேள்,

வெற்றி ஒன்றும்

கம்பசூத்திரம் அல்ல .....


நல்லவை நாடு

அல்லவை அகற்று

செய்வதை சொல்

சொல்வதை செய்.....


உலகம் உன்

சட்டைப்பையில் விழும்....






No comments:

Post a Comment